சமூக ஆர்வலர் முகிலனை மீட்டுத் தர கோரிக்கை - சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசியல் கட்சியினர்
சமூக ஆர்வலர் முகிலனை மீட்டுத்தரக் கோரி சென்னையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் , பழ. நெடுமாறன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முகிலனின் மனைவி பூங்கொடியும் கலந்து கொண்டார்.
Next Story