கோயம்பேடு கடைகளை ஒதுக்கீடு செய்ய தடை கோரி வழக்கு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அருகில் உள்ள உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள 492 கடைகளில், 369 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அருகில் உள்ள உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் உள்ள 492 கடைகளில், 369 கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. காலியாக உள்ள 23 கடைகளை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்ய தடை கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடைகளுக்கு அதிக வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் வரும் 6-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டனர்.
Next Story