கோவில் விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு மறுப்பு : 3 மணி நேரமாக மறியலில் ஈடுபட்ட மக்கள்

ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் விழா நடந்தபோது, கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
கோவில் விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு மறுப்பு : 3 மணி நேரமாக மறியலில் ஈடுபட்ட மக்கள்
x
ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சமீபத்தில் விழா நடந்தபோது, கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, 4 ஆண்டுகளாக பிரச்சினை இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், அருகில் உள்ள மதுரை வீரன் கோயில் விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஒன்று திரண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று இரவு 8 மணி அளவில் மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை நீடித்த இந்த போராட்டத்தால், ஈரோடு - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் காத்திருந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, டி.எஸ்.பி ராஜகுமார் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்