பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம் : மாமல்லபுரம் டிஎஸ்பி, 2 ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

மாமல்லபுரம் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், வாக்குமூலத்தில் அவர் புகார் தெரிவித்திருந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், இன்ஸ்பெக்டர் கண்ணன், பாண்டி, ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம் : மாமல்லபுரம் டிஎஸ்பி, 2 ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்
x
மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலம் முன்பு பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், வாக்குமூலத்தில் அவர் புகார் தெரிவித்திருந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்புராஜ், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டி, ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூவரும் சென்னை தலைமை அலுவலக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமனி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்