டிக் டாக்கில் கலக்கிய சிறுவன் - ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை

நெல்லை மாவட்டம் குறிச்சிகுளத்தில், 9 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிக் டாக்கில் கலக்கிய சிறுவன் - ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை
x
நெல்லை மாவட்டம் தாழையூத்து  அருகே குறிச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த  தளவாய், சரோஜா தம்பதியரின் 9 வயது மகன் கொம்பையா.  கடந்த ஞாயிறு அன்று விளையாடச் சென்றவன், வீடு திரும்பாததால், அவனைத் தேடி வந்த நிலையில், அந்த கிராமத்திற்கு அருகே நான்கு வழிச் சாலையை ஒட்டிய முட்புதரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். அவனது  தலையில் கல்லால் அடித்த காயம் இருந்ததால் தீவிர விசாரணை  மேற்கொண்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவனை கைது செய்தனர். 

போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், சிறுவன் கொம்பையா,  டிக் டாக் மற்றும் பப்ஜி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி அப்பகுதி இளைஞர்களுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளதுடன், அதை  சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மகிழ்ந்துள்ளான். அதை பயன்படுத்தி,  அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி  ஓரினச் சேர்க்கைக்கு  மாயாண்டி ஈடுபடுத்தியது தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தலை வெளியே சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த சிறுவனை கல்லால் தாக்கி  கொலை செய்ததாக மாயாண்டி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். 

அதனையடுத்து மாயாண்டியை போலீசார் சிறையில் அடைத்தனர். செல்போனில் வீடியோக்களை காட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தி 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்