12 வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி..!

சென்னை கேளாம்பாக்கத்தில் 12 வது மாடியில் இருந்து விழுந்ததில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
12 வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் பலி..!
x
பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சல்மான் ஷரீஃப் என்ற மாணவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில் நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சல்மான் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் வழக்கம் போல் பால்கனி வழியாக அறைக்குள் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்ததில் சல்மான் மண்டை உடைத்து சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவனின் சடலத்தை மீட்ட போலீசார், இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்