"விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்" - நிதின் கட்கரி உறுதி

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
விரைவில் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் - நிதின் கட்கரி உறுதி
x
தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க.வை புறக்கணித்தாலும்  தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் தங்கள் முதல் வேலை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த தகவலை தமிழக பாஜக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, கர்நாடகம் உள்பட 4 தென் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் எனவும் காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்