பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்

கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
பிறந்து 15 நாட்களே ஆன இரு நாய்குட்டிகள் அடித்து கொலை : சப்தம் எழுப்பியதால் பேட்டரி கடை உரிமையாளர்கள் வெறிச்செயல்
x
கும்பகோணம் அருகே பிறந்து 15 நாட்களே ஆன இரண்டு நாய்குட்டிகள் அடித்து கொன்றதாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் மூர்த்தி சாலையைச் சேர்ந்த கணேசமூர்த்தி, தெரு நாய்களை பராமரித்து வருகிறார். இந்நிலையில், இரண்டு நாய் குட்டிகள் சப்தம் எழுப்பியதால் எரிச்சலுற்ற பேட்டரி கடை உரிமையாளர்கள் இருவர் நாய்குட்டிகளை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணேசமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து , தலைமறைவாக உள்ள ராம்குமார் மற்றும் ராமநாதன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்