அரசியல் வட்டாரத்தில், மக்கள் நீதி மய்யத்தின் தாக்கம்...
மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 11 நாடாளுமன்ற தொகுதிகளில், அமமுக மற்றும் நாம்தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி மக்கள் நீதி மய்யம், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி ஆகிய 11 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல வட சென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். குறிப்பாக கோவை நாடாளுமன்ற தொகுதியில், மக்கள் நீதி மய்யத்திற்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்த வாக்குகளில், சிறிய புள்ளி விகிதத்திலே மக்கள் நீதி மய்யத்தை, நாம் தமிழர் கட்சி முந்தியுள்ளது. முதல் முறையாக களம்காணும் அரசியல்பாரம்பரியம் இல்லாத மக்கள் நீதிமய்யத்தின் இந்த தாக்கம், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story