எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற அரசாணையையும், இடஒதுக்கீட்டு நடைமுறைகளையும் பின்பற்றாமல் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தும் எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரியின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டுக்கு தடை விதிக்கக் கோரியிருந்தார்.  மனுவை விசாரித்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு ஆகியோர்,  4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்