சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய காட்டெருமை

குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை காட்டெருமை விரட்டி விரட்டி தாக்கியதில், சிறுமி மற்றும் பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி தாக்கிய காட்டெருமை
x
குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை காட்டெருமை விரட்டி விரட்டி தாக்கியதில், சிறுமி  மற்றும் பெண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 10 பேர் ஊட்டியை சுற்றி பார்க்க சென்றனர். அங்கு, மஞ்சகம்பை கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து, தேயிலை தோட்டம் வழியாக சென்றபோது, காட்டெருமை ஒன்று அவர்களை துரத்தியது. அவர்கள் தலைதெறிக்க ஓடிய நிலையில், தனலெட்சுமி என்ற பெண்ணும், 12 வயது சிறுமி ஒருவரும் காட்டெருமை வசம் சிக்கினர். காட்டெருமை தாக்கியதில், பலத்த காயமடைந்த இருவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அவ்வப்போது மக்களை தாக்கிவரும் காட்டெருமையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிய பரபரப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்