"நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்" - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம் - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை
x
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், துப்பாக்கி சூடு நடைபெற்று  ஓராண்டு கடந்த  பின்னரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களுக்குப் பாதுகாப்பளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படவில்லை என்றும், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகவே அரசு செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் காவல்துறை கெடுபிடி காட்டுவதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்