வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் : பதுக்கி வைத்த நபருக்கு போலீசார் வலை

திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் : பதுக்கி வைத்த நபருக்கு போலீசார் வலை
x
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சோழவரத்தில், நாகராஜ் என்பவருக்கு சொந்தமான, வீட்டில் செம்மரக்கட்டைகள் இருப்பதாக காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 2 டன் எடையுள்ள 27 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதனை பறிமுதல் செய்த சோழவரம் போலீசார், வீட்டின் உரிமையாளர் நாகராஜை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்