தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம்தேதி நடைபெறுகிறது.
தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்
x
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் நடைபெற்ற சமயத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுக்கு வந்த மர்ம கடிதம் ஒன்றில் தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை செயலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்