சேலம் மாவட்டம் வீரகனூரில் வழி தவறிய புள்ளி மான் வேலியில் சிக்கி கால் முறிவு

சேலம் மாவட்டம் வீரகனூரில் வழி தவறிய புள்ளி மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது.
சேலம் மாவட்டம் வீரகனூரில் வழி தவறிய புள்ளி மான் வேலியில் சிக்கி கால் முறிவு
x
சேலம் மாவட்டம் வீரகனூரில் வழி தவறிய புள்ளி மான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த மானை நாய்கள் தூரத்தியதால், தப்பியோட முயற்சித்த மான், மாதா கோயிலின் கம்பி வேலியில் சிக்கியது. இதனை கண்ட அந்த பகுதி இளைஞர்கள், மானை மீட்டனர். வேலியில் அகப்பட்டதில் மானின் காலில் எலும்பு முறிவுடன் ரத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், மானை மீட்டு மேல் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்