தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக நடிகர் சங்கம் கூறியுள்ளது
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
x
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள  நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக நடிகர் சங்கம் கூறியுள்ளது.தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ.பத்மநாபனை நியமிக்க சங்க உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். தேர்தல் தேதியை முடிவு செய்யவும் அவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல்  தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் தேர்தல் அதிகாரியிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார். அதனை அடுத்து நடிகர் சங்க  தேர்தல் விதிமுறைகள்அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்