கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்

கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை - கமல்ஹாசன்
x
அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின் போது கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. இதையடுத்து தமது தேர்தல் பிரசாரத்தை 2 நாட்கள் நிறுத்தி வைத்த கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சக்திவேலுவை ஆதரித்து தோப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  கோட்சே குறித்து தாம் பேசியது சரித்திர உண்மை என்று கூறினார். தாம் வன்முறையை தூண்டுவதாக கூறுவது மனதை காயப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவமானங்களை கண்டு கவலைப்படவில்லை என்று கூறிய அவர், தாம் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றார். இந்துக்களை புண்படுத்தினால் தமது வீட்டில் உள்ளவர்களே கோபிப்பார்கள் என்று கூறிய கமல்ஹாசன், தமது பேச்சு முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் சிறப்பாக இருக்கும்




பின்னர் மேல அனுப்பானடியில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி  ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பல மடங்கு சிறப்பாக இருக்கும் என்று கூறினார். தமது எஞ்சிய வாழ்க்கை முழுவதும் மக்களுக்காக சேவை செய்ய போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்