அரசு மருத்துவமனையில் தோட்டா கண்டெடுப்பு : டீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் தோட்டா கண்டெடுப்பு : டீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
x
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதியில் துப்புரவு பணியின் போது இந்த துப்பாக்கி தோட்டா கிடைத்துள்ளது. சம்பவம் அறிந்த மருத்துவமனை டீன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளுக்கு பாதுகாப்புக்காக வரும் போலீஸ் துப்பாக்கியின் தோட்டாவா, அல்லது, யாரையும் குறி வைத்து மருத்துவமனைக்குள் நுழைந்த சமூக விரோதிகள் விட்டுச் சென்றதா என்பது தெரியவில்லை.

Next Story

மேலும் செய்திகள்