உடலில் காயங்களுடன் வாலிபர் உடல் : கொலையா என்று போலீசார் விசாரணை
ஒசூர் தளி அருகே சிலிபிலிமங்களம் ஏரி கரையோரத்தில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஒசூர் தளி அருகே சிலிபிலிமங்களம் ஏரி கரையோரத்தில் வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார் என்ற விபரம் தெரியவில்லை. உடலில் பலத்த காயத்துடன் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story