திருவண்ணாமலை : குழந்தை கடத்த வந்ததாக கூறி தாக்குதல் நடத்திய பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி இளைஞரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரும்பேடு கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்த இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோரை வரவழைத்து அந்த இளைஞரை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story