மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திண்டிவனம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த நபரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூரை சேர்ந்த அஜீத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை அஜித்குமார் உள்ளிட்ட 3 பேர் கடத்தி சென்றனர். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கடந்த மாதம் கைது செய்தனர்.இதையடுத்து, மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்த அஜித்குமார் தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில், திண்டிவனம் திரும்பிய அஜித்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Next Story