போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கிகள் டம்மி...

தேனி மாவட்டத்தில், கொலை வழக்கில் தேடப்பட்டவர் பதுங்கியிருந்த வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கிகள் டம்மி என தெரிய வந்துள்ளது.
போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கிகள் டம்மி...
x
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில், குற்றவாளியாக போலீசார் சந்தேகிக்கும் எஸ்டேட் மணி என்பவர், போடி அருகே பொட்டல்களம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னால் மாவட்ட செயலாளர் கௌர் மோகன்தாஸ் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கிருந்த கத்தி, அரிவாள் மற்றும் ஏ.கே .47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார் உரிமையாளர் கௌர் மோகன்தாசை, தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரணை  நடத்தி வருகின்றனர். அங்கிருந்து, கோவில் கலசங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனை தொடர்பு கொண்ட போது, கைபற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் டம்மி துப்பாக்கிகள் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கியு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்