நடுநிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பூரில் நடுநிலைப்பள்ளி ஒன்றுக்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுநிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
திருப்பூரில் நடுநிலைப்பள்ளி ஒன்றுக்கு, தொடர் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்ததையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணரை சாலையில் உள்ள சின்னசாமி கவுண்டர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, தொடர்ச்சியாக 4 கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். கடிதங்களை கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்