தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பவர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நடத்தப்பட உள்ள நினைவஞ்சலி கூட்டத்தில்,பங்கேற்ற உள்ளவர்கள் குறித்த விபரங்களை அரசு வழக்கறிஞரிடம் மனுதாரர் தரப்பு தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பவர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்
x
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நடத்தப்பட உள்ள நினைவஞ்சலி கூட்டத்தில், பங்கேற்ற உள்ளவர்கள் குறித்த விபரங்களை அரசு வழக்கறிஞரிடம் மனுதாரர் தரப்பு தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, நினைவஞ்சலி கூட்டத்தை உள் கூட்டரங்குகளில் நடத்த அனுமதி வழங்கலாம், ஊர்வலம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்