தனியார் பேருந்து - டெம்போ வேன் விபத்து

கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தும், டெம்போ வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.
தனியார் பேருந்து - டெம்போ வேன் விபத்து
x
கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தும், டெம்போ வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். வேப்பனஹள்ளியை அடுத்த  பெரியதமன்றபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 பேர் வேலைக்கு சென்றுவிட்டு, டெம்போவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நாச்சிகுப்பம் அருகே எதிரே வந்த தனியார் பேருந்து மீது டெம்போ மோதியதில், வேனில் இருந்த ஜெயம்மா,  திம்மக்கா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்