பணியை நிரந்தரமாக்க வேண்டும் : ஊர்காவல் படை வீரர் தற்கொலை மிரட்டல்
தருமபுரி அருகே மொரப்பூரில் செல்போன் டவர் மீது ஏறிய ஊர்க்காவல் படை வீரர் பணியை நிரந்தரமாக்க கோரி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊர்காவல் படை வீரர் பிரபு என்பவர், தற்கொலை மிரட்டல் விடுப்பது குறித்து தகவலறிந்த அரூர் போலீஸார் மற்றும், தீயணைப்பு மீட்பு குழுவினர் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்க செய்தனர். சோர்வு நிலையில் காணப்பட்ட பிரபுவை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Next Story