"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.
x
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால், நகர வாசிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்துக்கு 5 குடம் அளவுக்கே தண்ணீர் வழங்கப்படும் நிலையில், குடிநீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தினமும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்