கொத்தடிமைகளாக பணிபுரிந்த 16 குழந்தைகள் உட்பட 37 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிப்படியில், பிச்சை என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக புகார் எழுந்தது.
கொத்தடிமைகளாக பணிபுரிந்த 16 குழந்தைகள் உட்பட 37 பேர் மீட்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிப்படியில், பிச்சை என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக பலர் வேலை செய்வதாக புகார் எழுந்தது.இதனால் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அங்கு 16 குழந்தைகள் உட்பட 37 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த அவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு சென்று மீட்கப்பட்ட அனைவரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்