கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசி... பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்

பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசி... பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்
x
பொள்ளாச்சி அருகே கருக்கலைப்புக்காக செலுத்தப்பட்ட ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலி பெண் மருத்துவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நெகமம் அடுத்த மெட்டுவாவி பகுதியை சேர்ந்த வனிதாமணிக்கு, ஏற்கனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் அவர் கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து கருவை கலைக்க முடிவு செய்த தம்பதியினர், வடசித்தூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் முத்துலட்சுமியை நாடி உள்ளனர். அவரும் வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசியை செலுத்தியுள்ளார். 

இந்நிலையில், சிறிது நேரத்தில் வனிதாமணியின் உடல் மோசமடையவே, முத்துலட்சுமி தனது காரில் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே, வனிதாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், முத்துலட்சுமியின் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, வீட்டை சுற்றிலும் ஊசிகள் மற்றும் மருந்துகள் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்துலட்சுமியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முத்துலெட்சுமியை தேடி வந்த நிலையில், நாகப்பட்டினத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்