கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை - உயர்நீதிமன்ற கிளையில், டிஜிபி பதில்மனு
கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்றும், தமிழக காவல் துறை தலைவர் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த
வழக்கில், தமிழக காவல் துறை தலைவர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், கட்சி கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க சில காவல்துறையினர், தயக்கம் காட்டுவதாகவும், வாகனங்கள் சோதனை செய்யப்படாத போது, அது சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story