திரையரங்கம் ஒன்றில் பயங்கர தீ விபத்து - ரசிகர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தமிழக, கேரள எல்லையில் இயங்கி வரும் இந்த திரையரங்கில் மலையாள சினிமா ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென்று திரையரங்கின் புரொஜெக்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென் பரவியதால் ரசிகர்கள் அலறியடித்து கொண்டு திரையரங்கில் இருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
Next Story