குழந்தை கடத்தல் விவகாரம் அரசின் மீது நம்பிக்கை இல்லை - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
குழந்தை கடத்தல் விவகாரத்தில் அரசின் மீது நம்பிக்கை இல்லாததால் உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியான பிறகே 7 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறைக்கும், அரசு மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சிறப்புக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story