முதலமைச்சருக்கு கொலைமிரட்டல் - பரபரப்பு

முதலமைச்சரை கொலை செய்து விடுவதாக மர்மநபர் ஒருவர், போனில் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சருக்கு கொலைமிரட்டல் - பரபரப்பு
x
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் அழைத்த மர்ம நபர் ஒருவர், தனது பெயரை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அந்த நபர்,  முதலமைச்சரை கொடைக்கானலில் வைத்து கொலை செய்ய உள்ளதாக கூறியதுடன் இணைப்பை உடனே துண்டித்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார், போனில் பேசிய அந்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து, அந்த நபரை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்