குறிப்பிட்ட சமுதாயம் தொடர்பான ஆடியோ விவகாரம் - மேலும் ஒருவர் கைது
குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி தரக்குறைவாக பேசி வெளியான ஆடியோ விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரை திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த 17 -ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ காரணமாக பொன்னமராவதி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் வெடித்தது. இதுதொடர்பாக பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காட்டை சேர்ந்த செல்வகுமார் மற்றும் வசந்த் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெருஞ்சி பட்டியை சேர்ந்த சத்யராஜ் என்பவரை சிங்கப்பூரில் இருந்து திரும்பிய போது திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
Next Story