அண்ணன் தம்பி சொத்து தகராறு : உடன் பிறந்த தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன்

தூத்துக்குடி சின்னக்கடை தெரு பகுதியே சேர்ந்த ஜேசு என்பவரின் மகன்களான ஜெகன், சிம்சன், சுமன் ஆகியோருக்கு சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
அண்ணன் தம்பி சொத்து தகராறு : உடன் பிறந்த தம்பியை சுட்டுக்கொன்ற அண்ணன்
x
தூத்துக்குடி சின்னக்கடை தெரு பகுதியே சேர்ந்த ஜேசு என்பவரின் மகன்களான ஜெகன், சிம்சன், சுமன் ஆகியோருக்கு சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெகனுக்கும், சிம்சனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சிம்சனை சுட்டுவிட்டு தப்பியோடி விட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்த சிம்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில் தனது கூட்டாளிகளுடன் தலைமறைவாக இருந்த ஜெகனை திருவனந்தபுரம் போலீசார் கைது செய்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர்கள் 5 பேரும் பாளையங்ககோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்