பேஸ்புக் மூலமாக ஆந்திர வியாபாரியை சென்னை வரவழைத்து கொள்ளை

பேஸ்புக் மூலமாக தொடர்புகொண்டு ஆந்திர வியாபாரியை சென்னை வரவழைத்து, நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பேஸ்புக் மூலமாக ஆந்திர வியாபாரியை சென்னை வரவழைத்து கொள்ளை
x
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர் ஆன்லைன் மூலமாக ராசிகற்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் முகநூல் மூலமாக மும்பையில் இருந்து தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ராசிக்கற்களை சென்னையில் தனது ஆட்கள் மூலமாக வாங்கி கொள்வதாக கூறியிருக்கிறார். அதனை நம்பிய சீனிவாசராவ், சென்னை பாரிமுனை மூர் தெருவில் உள்ள தனியார் விடுதிக்கு வந்துள்ளார். இதையடுத்து, திடீரென சீனிவாசராவ் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த ம‌ர்ம நபர்கள் நான்கு பேர் தங்களை போலீஸ் என கூறிகொண்டு, சீனிவாசராவ் வைத்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ராசிகற்கள், மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனிவாசராவ் அளித்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்துள்ள வடக்கு கடற்கரை போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்