சேலம் : செல்லப்பிராணிகளுக்கு அனஸ்தீஷியா சிகிச்சை முறை
சேலம் கால்நடை அரசு மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு மயக்க வாயு கொடுத்து அறுவை சிகிச்சை செய்யும் முறை முதன்முதலாக துவக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பன்முக கால்நடை மருத்துவமனையில் அதி நவீன கருவிகளுடன் ரோசி என்ற நாய்க்கு இம்முறையில் சிகிக்சை அளிக்கப்பட்டது. மூத்த மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில் கால்நடை மருத்துவர்கள் ஐயா சாமி வாசுதேவன் உள்ளிட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு அனஸ்தீஷியா வாயு அளித்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். மயக்க வாயு செலுத்தி அறுவை சிகிச்சை செய்யும் முறைக்கு செல்லப்பிராணிகளை வளர்ப்போர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Next Story