இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்

மயிலாடுதுறை அருகே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டை கொலை சம்பவம் : மேலும் 2 பேர் கைது - கிராமத்தில் தொடரும் பதற்றம்
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் கீழத்தெருவில் இளங்கோவன் என்பவர் கிராம நாட்டாண்மையாக நீடிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன்பகை ஏற்பட்டது.  பகை முற்றியதில் தங்கமணி, இளவரசன் ஆகிய 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய15க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த‌து. அதில், திருமுருகன், வினோத், மான்சிங், கஜேந்திரன் ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் வேல்முருகன் மற்றும் நவீன்ராஜ் ஆகிய 2 பேரை மயிலாடுதுறை போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் கைது நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்