பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காவலரை பீர்பாட்டிலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு அதிமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீர்பாட்டிலால் காவலரை குத்திய பாமக நிர்வாகிகள் கைது - சமூக வலைதளங்களில் பரவும் பரபரப்பு வீடியோ
x
தாராபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்துவரும் சந்திரசேகரன் கடந்த 15 ஆம் தேதி இரவு ஊர்காவல்படை வீரர் சிவக்குமாருடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அலங்கியம் சாலை ரவுண்டானா அருகே கூட்டமாக நின்றிருந்த சிலரை கலைந்து செல்லுமாறு கூறியபோது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு அருகில் கிடந்த  பீர்பாட்டிலை  உடைத்து காவலரை குத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஜெயேந்திரன் ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் ராசிபுரம் அதிமுக நகரச் செயலாளர் காமராஜ் ஆகியோர் காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்துள்ளவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் இல்லையென்றால்  ஊருக்குள் குடியிருக்க முடியாது என்றும் அதிமுக நகரச் செயலாளர் மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் இருந்து தாராபுரத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்