அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 18ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவிலுள்ள புத்தூர் கடைவீதியில் போலீஸ் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார்,  பொறுப்பாளர் சிவா  என்பவரை கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்