இருசக்கர வாகனத்தின் லாக் உடைத்து திருட்டு - திருடனை பிடிக்க போலீசார் தீவிரம்

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது
இருசக்கர வாகனத்தின் லாக் உடைத்து திருட்டு - திருடனை பிடிக்க போலீசார் தீவிரம்
x
கடந்த 18-ம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு கடைமுன் நாகராஜன் என்பவர் நிறுத்திச் சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்நிலையில் அப்பகுதி கடை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆரய்ந்த போது, இளைஞர் ஒருவர் நாகராஜனின் இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு, வாகனத்தின் லாக்கை உடைத்து, திருடி சென்றது பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை போலீசார் தேடி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்