அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கியில் மாட்டு வண்டி பந்தயம் : சீறிப் பாய்ந்த காளைகள்
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆகாயமாரிய அம்மன் கோவிலில் சித்திரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. பெரிய மாடு, நடு மாடு என பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 8 ஜோடிகளும், நடு மாடு பிரிவில் 13 ஜோடிகளும் கலந்து கொண்டு களத்தில் சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு ரூ 80 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்