வேலைக்கு போகாததை மனைவி கண்டித்ததால் மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவர்
குடியாத்தம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை தீ வைத்து கொலை செய்த கணவன், தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த இந்திராநகரை சேர்ந்தவர் மதிவாணன். இவரது மனைவி கனிமொழி. கைத்தறி நெசவுத் தொழில் செய்து வந்த மதிவாணனுக்கு 2 மகன்கள் உள்ளனர். மதிவாணன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மதிவாணன், தன் மனைவி கனிமொழி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் படுகாயமடைந்த கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பி ஓடிய மதிவாணன் பேரணாம்பட்டு அருகே உள்ள சுடுகாட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story