50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி

நாயின் வெறியாட்டத்தால் பொதுமக்கள் பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனை நோக்கி படையெடுத்தபோதும், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
50க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய் - பொதுமக்கள் அதிருப்தி
x
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில், பொதுமக்களே ஒன்று சேர்ந்து, வெறிநாயை அடித்து கொன்றனர்.இதுகுறித்த தகவல் அறிந்த மாநகராட்சி நிர்வாகிகள், சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களை சிறைபிடித்த பொதுமக்கள், வெறிநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்ட போது வராமல், உயிரிழந்த பின்பு வருவதாக கூறி கடுமையான வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் நாயினை உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்