இன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெறுகிறது.
இன்று வைகையாற்றில் இறங்குகிறார், கள்ளழகர்
x
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்தி​ரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று நடைபெற்றது.சிறப்பு அபிஷேகம், ஆராதனைக்கு பிறகு, தேரில் அம்பாள் - சுந்தரேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில்,மதுரை சித்திரை திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு, இன்று காலை நடைபெறுகிறது.இதற்காக, வைகை ஆற்றில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து, வைகையாற்றில் இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்