வாக்கு இயந்திரத்தில் கோளாறு : 3 மணி நேரம் தாமதமான வாக்குப்பதிவு
நீலகிரி மாவட்டம், வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட கோடாமலை பகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு மூன்று மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட கோடாமலை பகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு மூன்று மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது. அதனால், வாக்களிப்பதற்காக அதிகாலையில் இருந்தே திரண்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை என அதிருப்தி அடைந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பின்னர் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
Next Story