வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது. முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்படவன்காடு 244 வது எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால் வாக்கு அளிப்பதற்காக காலையிலிருந்து காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிகாரிகள், மாற்று வாக்குப் பதிவு இயந்திரம் வரவழைக்க முயற்சி செய்தாலும், வாக்குப் பதிவு தொடங்க 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமானது.
Next Story