பா.ஜ.க நிர்வாகி வெட்டி படுகொலை

நாகை அருகே பாஜக நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க நிர்வாகி வெட்டி படுகொலை
x
நாகை அருகே பாஜக  நிர்வாகி செந்தில்குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள கீரன் ஏரியில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழையூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த  போலிசார்  அந்த சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் தலைவர் செந்தில்குமார் என்பதும், அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்