நீர் மாரியம்மன் கோவில் திருவிழா - அலகு குத்தி, பூங்கரகம் எடுத்த பக்தர்கள்

ஓமலூர் அருகே நீர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாய்ப்பூட்டு அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நீர் மாரியம்மன் கோவில் திருவிழா - அலகு குத்தி, பூங்கரகம் எடுத்த பக்தர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நீர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாய்ப்பூட்டு அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மழை பெய்ய வேண்டி ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படும். இந்தாண்டிற்கான திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் திருவிழாவில் இன்று கரகம் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.    

Next Story

மேலும் செய்திகள்