இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பணகுடி இஸ்ரோ மையம் அருகே காட்டுத்தீ பயங்கரமாக எரிவதால் ஏராளமான மரங்களும் வன விலங்குகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலினால் மரங்கள் மற்றும் செடி கொடிகள் காய்ந்து காணப்பட்டதால் திடிரென வனப்பகுதிக்குள் தீப்பிடித்து எரிய தொடங்கின. காற்றும் அதிகளவு அடித்ததால் தீ மளமளவென பிடித்து எரிய தொடங்கியதால் கடும் புகை மண்டலமாக அப்பகுதி காட்சியளித்து வருகிறது. தீயை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர். தீப்பிடித்து எரிந்து வரும் பணகுடி வன பீட் அருகே இஸ்ரோ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story